தேவையானவை:
புளி - 150 கிராம்
வெல்லம் - 200 கிராம்
சுக்குப்பொடி - கால் தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
செய்யும் முறை
புளியை ஊற வைத்துக் கரைத்து, வடிகட்டவும்.
வெல்லத்தை நன்கு பொடித்துக் கொள்ளவும்.
பொடித்த வெல்லத்தை வடிகட்டிய புளித் தண்ணீருடன் சேர்த்து வெல்லம் நன்கு கரையும் வரை கலக்கவும்.
பிறகு சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது எடுத்து அருந்தலாம்.
இந்த பானகம் கோடையில் உடல் குளிர்ச்சி அடைய வேண்டுமானால் குடிக்க உகந்தது ஆகும்.