தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி 2 சிட்டிகை
மிளகு, சீரகம் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
தனியா 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் 2
தக்காளி 4
உப்பு தேவையான அளவு
புளி நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை
கொஞ்சம்
செய்முறை
துவரம் பருப்பை 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், தனியா முதலியவற்றை மிக்ஸியில் நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
புளியை அரை டம்ளர் தண்ணீர் விட்டு, நன்கு கரைத்துக் கொள்ளவும்.
கரைத்த புளி தண்ணீரில், தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் மிளகு சீரக பொடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து, தக்காளி குழைந்ததும் வெந்த பருப்பை மசித்து, தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.
பருப்பு தண்ணீர் விட்டு, நுரை வந்தவுடன் இறக்கி கடுகு, மிளகாய் தாளிக்கவும்.
சுத்தம் செய்த கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு இறக்கவும்.