தேவையானவை
சோயா உருண்டைகள் - 1 கப்
பூண்டு - 4 பல்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்துமல்லித்தழை - சிறிதளவு
வெங்காயம் - 2
தக்காளி - 2
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
சோயா உருண்டைகளை உப்பு சேர்த்த வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைத்து எடுத்துப் பிழிந்து கொள்ளவும்.
தக்காளி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அரைத்து, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 8 நிமிடங்கள் மூடிய நிலையில் மைக்ரோ ஹையில் வைத்து சமைக்கவும்.
திறந்தவுடன் கொத்துமல்லி சேர்த்து உண்ணவும்.