Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரை சாதம் செய்வது எப்படி...?

Advertiesment
உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரை சாதம் செய்வது எப்படி...?
தேவையான பொருட்கள்:
 
அரிசி - 1 கப்
கீரை (ஏதாவது ஒரு வகை) - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு பற்கள் - 4
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)

செய்முறை:
 
சாதத்தை உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். பூண்டை நசுக்கி கொள்ளவும் அல்லது பொடியாக வெட்டிக் கொள்ளவும். 
 
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, சேர்த்து சற்று சிவக்க வறுக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
 
வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் உப்பு சேர்த்துக் கிளறி விடவும். பின்னர் அதில் கீரையைச் சேர்த்து வதக்கவும். தண்ணீர் விட தேவையில்லை. கீரையிலுள்ள நீர்ச்சத்தே போதுமானது.
 
அடுப்பை சிறு தீயில் வைத்து, அடிக்கடி கிளறி விட்டு, கீரை நன்றாக சுண்டும் வரை வதக்கவும். கடைசியில், வடித்த சாதத்தைக் கொட்டிக் கிளறி 3 நிமிடம் மூடி வைத்து இறக்கவும். சுவையான உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரை சாதம் தயார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க இப்படி செய்து பாருங்கள் !!