Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான தக்காளி பிரியாணி செய்வது எப்படி....?

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (17:01 IST)
தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்
பழுத்த தக்காளி - 8
புதினா - ஒரு கட்டு
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
பட்டை- சிறு துண்டு
லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு



செய்முறை:

தக்காளியை பொடியாக நறுக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். புதினாவையும் அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக, நறுக்கிக் வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் நறுக்கிக் வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், புதினா, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதோடு மஞ்சள்தூள், கரம்மசலாத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கிய பிறகு இரண்டரை கப் தண்ணீர் செய்து கொதிக்க விடவும். பிறகு பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். நன்றாக வெந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி பரிமாறவும். சுவையான தக்காளி பிரியாணி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments