Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமகமவென்று மணக்கும் சாம்பார் பொடி செய்ய வேண்டுமா...?

கமகமவென்று மணக்கும் சாம்பார் பொடி செய்ய வேண்டுமா...?
தேவையான பொருள்கள்:
 
துவரம் பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியா - 1/2 கிலோ
மிளகு - 20 கிராம்
சீரகம் - 20 கிராம்
வெந்தயம் - 5 கிராம்
பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:
 
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ளலாம். இதில் வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கலாம்.
 
இதோ சாம்பார் பொடி தயாராகி விட்டது. இந்த சாம்பார் பொடி போட்டு சாம்பார் செய்தால் கமகமவென்று மணக்கும். இதில் சாம்பார் வைக்கும்போது மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
 
குறிப்பு:
 
சாம்பார் பொடி தயாரிக்கும் போது, வறுக்கும் பொருட்கள் கருகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெந்தயத்தில் அடங்கியுள்ள வைட்டமின்கள் மற்றும் நன்மைகள் என்ன தெரியுமா...?