சுவை மிகுந்த தக்காளி ஊறுகாய் செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
தக்காளி - 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 குழிக்கரண்டி
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து 
செய்முறை:
 
தக்காளியை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளியுங்கள். பிறகு, இதில் மசித்த தக்காளியுடன், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு, பெருங்காயம்  போட்டு நன்றாக வதக்கவும்.
இந்தக் கலவை கொதித்து நன்றாக சுருண்டு எண்ணெய் பிரிந்து மிதந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும். இந்தக் தக்காளி ஊறுகாய் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையும் அதிகம். இவற்றை இட்லி, தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதம் இவற்றுடன்  சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...

சிக்கன்.. மட்டன்.. என்னென்ன சத்துக்கள்?.. என்ன வித்தியாசம்?. வாங்க பார்ப்போம்..

பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்!. இத மட்டும் செஞ்சி பாருங்க!..

உங்கள் குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் வரும் ஆபத்து!..

அடுத்த கட்டுரையில்
Show comments