Publish Date: Wed, 16 Dec 2015 (18:46 IST)
Updated Date: Wed, 16 Dec 2015 (18:50 IST)
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தெலுங்கு திரையுலகம் சார்பில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
கன மழையால் சென்னை பாதித்த போது தெலுங்கு நடிகர் ஏராளமானோர் கோடிக் கணக்கில் நிதியுதவி அளித்தனர். மேலும் உண்டியல் ஏந்தியும் நிதி வசூலித்தும் சென்னை மக்களுக்கு வழங்கினார்.
இந்நிலையில், சென்னை மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் “சென்னையை ஆதரிப்போம்” என்ற தலைப்பில், தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகர்கள் மற்றும் பின்னனி பாடகர்கள் சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கி, அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள்.
அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...