Publish Date: Tue, 08 Sep 2009 (15:15 IST)
Updated Date: Tue, 08 Sep 2009 (15:14 IST)
தற்போது பன்றிக் காய்ச்சல் நோய் பரவல் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் இருந்து வருகிறது.
உங்கள் வீட்டில் உள்ளவர்களின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமைதான்.
வீட்டிலுள்ள அனைவரும் பயன்படுத்தக் கூடிய பொதுவான பொருட்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
கதவுகளின் கைப் பிடிகள், வாசலில் உள்ள கால்மிதியடி, டிவி ரிமோட், வீட்டில் இருக்கும் தொலைபேசி, பிரிட்ஜ் கதவின் பிடி என ஒவ்வொன்றையும் சுத்தமாக வைத்திருங்கள்.
அவ்வப்போது கிருமி நாசினிக் கொண்டு அதனை துடைத்து விடுங்கள். கால் மிதியடிகளை வெயிலில் போட்டு உலர்த்துங்கள்.
இதனால் ஒருவர் கையில் பரவியக் கிருமி, இதுபோன்றப் பொருட்களை தொடும்போது இவற்றில் கிருமி ஒட்டிக் கொள்ளும். அதனை வேறொருவர் தொடும்போது அவருக்கு கிருமி பரவ வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
எனவே வீட்டை சுகாதாரமாகப் பேணுவோம். தொற்று நோயை தடுப்போம்.