Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமையலில் சில செய்யக்கூடாத தவறுகள் என்ன தெரியுமா...?

சமையலில் சில செய்யக்கூடாத தவறுகள் என்ன தெரியுமா...?
காய்கறிகளை நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவக்கூடாது.
* ரசம் அதிகம் கொதிக்கக்கூடாது.
 
குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
 
*  காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
 
மோர்க்குழம்பு ஆறும்வரை மூடக்கூடாது.
 
கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
 
காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
 
சூடாக இருக்கும் போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
 
தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
 
பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
 
பெருங்காயம் தாளிக்கும்போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
 
தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
 
குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெய்யோ நன்றாக காயக்கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கறிவேப்பிலையால் இத்தனை பயன்களா...!!