Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டி‌ன் சிறப்புகள்

தமிழ்நாட்டி‌ன் சிறப்புகள்
, செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:19 IST)
எத்தனையோ சிறப்பு வாய்ந்த அம்சங்கள் தமிழ்நாட்டில் இடம்பிடித்துள்ளன. அவை எல்லாம் தமிழ்நாட்டை சிறப்பிக்கின்றன. அவற்றின் பட்டியலைக் காண்போம்.

கல்லணைதான் மிகப் பழமையான அணைக்கட்டு ஆகும்.

அதிகமான ஏரிகள் கொண்ட மாவட்டமாக காஞ்சிபுரம் அமைந்துள்ளது.

மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா தமிழகத்தின் சிறப்புதான்.

ஈரோடு அடுத்து மேட்டூரில் உள்ள அணைதான் மிகப்பெரிய அணையாகும்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் திகழ்கிறது.

தொலைநோ‌க்‌கிக‌ளிலேயே காவலூர் வைணுபாப்பு மிகப்பெரிய தொலைநோக்கியாகும்.

தமிழகத்தின் நுழைவாயிலாக, துறைமுகத்தைக் கொண்ட தூத்துக்குடி திகழ்கிறது.

கங்கைக்கு ஈடான ஆறாக காவிரி ஆறு விளங்குகிறது. இது தென்னாட்டு கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோயிலின் கோபுரம் மிக உயர்ந்த கோபுரம் என்ற பெருமையை கொண்டுள்ளது.

மலை வாசஸ்தலங்களில் எல்லாம் ராணியாக திகழ்வது ஊட்டியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil