பட்ஜெட் யாருக்குச் சாதகமாக...
, வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (13:34 IST)
மத்திய பட்ஜெட் சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு, தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்குமா அல்லது பெரிய தொழில் வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்குமா என்ற கேள்வி பல தரப்புகளில் கேட்கப்படுகிறது.இந்த பட்ஜெட் அரசியல் ரீதியான எதிர்பார்ப்புகளையும், பொருளாதார மந்த நிலையை போக்கி, வளர்ச்சிகானதாக இருக்க வேண்டும். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. பல மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடக்க போகின்றது. சென்ற இரண்டு மாதங்களுக்குள் நடந்த குஜராத், இமாசல பிரதேச மாநில தேர்தல்களில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எதிர்பார்ப்புகள் பொய்த்து போய் விட்டன.பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடு என்று புள்ளி விபரங்களுடன் விளக்கம் அளித்தாலும், இது பொது மக்களை திருப்தி செய்யவில்லை. தினசரி அதிகரித்து வரும் உணவு பொருட்களின் விலை உயர்வு, கடன் சுமையால் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள், கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து விட்டு, சாரி சாரியாக நகரங்களை நோக்கி இடம் பெயரும் அவலம் இவை எல்லாம் பொருளாதார வளர்ச்சியின் பலன் யாருக்கு போய் சேர்ந்துள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மத்திய அரசின் அதிகார பூர்வ அறிவிப்பின்படி நேரடி, மறைமுக வரி வருவாய் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இந்த வரி வருவாயை கணக்கில் எடுத்துக் கொண்டு விவசாயிகளின் ஒட்டு மொத்த கடன் நிலுவை தள்ளுபடி செய்யப்படும். ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அரசின் ஒதுக்கீடு அதிகரிக்கபடும் மத்திய தர வருவாய் பிரிவினரின் வரிச் சுமைகள் குறைக்கப்படும். உணவுப் பொருட்கள் குறிப்பாக சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் போன்ற பொருட்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி, உற்பத்தி வரி, வாட் வரி நீக்கப்படும் அல்லது குறைக்கபடும். உயிர் காக்கும் மருந்துகள் மட்டுமல்லாது, எல்லாவித மருந்துகள் மீதான பலதரப்பட்ட வரிகள் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் நிலவுகிறது. மற்றொரு தரப்பினர் வரி வருவாய் எதிர்பார்த்த அளவு இருப்பதால் வரி விகிதங்களை குறைக்க வேண்டும் என்று தொழில் மற்றும் வர்த்தக துறையினரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அடுத்த வருடத்திலும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் மற்ற நாடுகளில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளின் பாதிப்பு இங்கும் இருக்கும். இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். இதன் விளைவாக இங்கும் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்படும்.
இதனை எல்லாம் கருத்தில் கொண்டுதான் தொழில் மற்றும் வர்த்தக துறையினர் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். கலால் வரி, சுங்கத் தீர்வை, விற்பனை வரி, நிறுவன வருமான வரி, பங்குகளை வாங்கி விற்பனை செய்யும் போது கிடைக்கும் இலாபத்தின் மீதான வரி, நீண்ட கால முதலீட்டு திட்டங்களுக்கு வரிச் சலுகை, பங்கு ஈவுத் தொகை மீதான வரி ஆகிய சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். சாமானிய மக்களின் எதிர்பார்ப்பும், வர்த்தக தொழில் துறையினரின் எதிர்பார்ப்பும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா ?உங்கள் கருத்து என்ன ? உங்கள் எதிர்பார்ப்பு என்ன? எங்கள் இணைய தளத்தில் உங்கள் ஆலோசனைகளை பதிவு செய்யுங்கள். இணைய தளத்தில் தட்டச்சு செய்ய முடியாதவர்கள் வெள்ளைத்தாளில் ஆங்கிலம், அல்லது தமிழில் உங்கள் கருத்துக்களை வெள்ளைத்தாளில் ஒரு பக்கம் மட்டும் எழுதி கீழ்கண்ட முகவரிக்கு தபால் அல்லது கூரியரில் அனுப்பலாம். ஆசிரியர்தமிழ்.வெப்துனியா.காம்2
கிருபா சங்கரி தெருமேற்கு மாம்பலம்,சென்னை-600 033. மின்-அஞ்சல் : [email protected] முன்னதாக வாசகர்கள் தெரிவித்த கருத்துகள்!