Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்; பட்ஜெட் குறித்து மோடி

Arun Prasath
வெள்ளி, 31 ஜனவரி 2020 (11:50 IST)
இந்திய பொருளாதாரத்தை மீட்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையை சந்தித்தது. மேலும் உள்நாட்டு உற்பத்தியின் சதவீதம் குறைந்து போனது. இதன் விளைவாக ஆட்டோமொபைல் துறை பெரும் வீழ்ச்சியை கண்டது.

இதனால் பலரும் வேலை இழந்தனர். இந்த மந்தநிலையை குறித்து எதிர்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் ஆளும் அரசை கடுமையாக சாடினர். இந்நிலையில் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்த பிரதமர் மோடி, “மத்திய பட்ஜெட் அனைவருக்கும் உகந்ததாக இருக்கும், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாக இருக்கும்” என கூறியுள்ளார்.

பட்ஜெட்டில் வரிச் சலுகைகளை உயர்வு, விவசாயத்திற்கு அதிக நிதியை ஒதுக்குதல் போன்றவற்றை மக்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments