Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பரோலில் வருகிறாரா சசிகலா?

Webdunia
ஞாயிறு, 18 நவம்பர் 2018 (14:46 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, ஏற்கனவே அவர் கணவர் உடல்நலம் இல்லாதபோதும், மரணம் அடைந்தபோதும் என இரண்டு முறை பரோலில் வந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பரோலில் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் சமீபத்தில் சசிகலா பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதில் உள்ள சில தகவல்கள் தவறாக இருப்பதாக ஆணையம் உறுதி செய்துள்ளதால் இதுகுறித்து சசிகலாவிடம் விசாரணை செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது.

சசிகலாவிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலமோ அல்லது பரோலில் அவரை சென்னைக்கு வரவழைத்தோ அல்லது ஆணையத்தின் அதிகாரிகள் பெங்களூர் சிறைக்கு சென்றோ விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. சசிகலாவை பரோலில் சென்னைக்கு வரவழைத்து விசாரணை செய்யவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் மீண்டும் ஒருமுறை சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் வெட்டி கொலை.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

சரோஜா தேவி மரணத்தை சித்தராமையா மரணம் என தவறாக மொழி பெயர்த்த மெட்டா.. கடும் கண்டனம்..!

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments