Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது என்னடா தினகரனுக்கு வந்த சோதனை - புதிய கட்சி தொடங்கும் டிடிவி பாஸ்கரன்

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (16:38 IST)
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரனின் தம்பி பாஸ்கரன் தினகரனுக்கு எதிராக புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து வருகிறது. பல புதிய கட்சிகள் முளைத்துக்கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பிற்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 
 
அந்நிலையில், தினகரனுக்கும், அவரின் உறவினரும், சசிகலாவின் சகோதரருமான திவாகரனுக்கும் இடையே மோதல் எழுந்தது. அதையடுத்து, தினகரனுக்கு எதிராக அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை திவாகரன் தொடங்கினார். 
 
இந்நிலையில், சசிகலா குடும்பத்தில் 3வது நபர் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல. டிடிவி தினகரனின் உடன் பிறந்த சகோதரர் டிடிவி பாஸ்கரன். இவர் ஓரிரு சினிமாவிலும் நடித்துள்ளார்.
 
விரைவில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிப்பேன் என பாஸ்கரன் கூறியுள்ளார். ஜெ.வின் வழியில் நான் என தினகரனும், எம்.ஜி.ஆர் வழியில் நான் என திவாகரனும் கூறியுள்ள நிலையில், எம்.ஜி.ஆரின் தொண்டர்களுக்காக நான் என டிடிவி பாஸ்கரன் கூறியுள்ளார்.
 
கொஞ்சம் அதிகமாக ஆடியதால், ஜெயலலிதா இவரை கஞ்சா வழக்கில் சிறையில் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இவர் மீது போலி ஆவணங்கள் சமர்பித்து சொகுசு கார் வாங்கிய வழக்கு உட்பட சில வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.
 
சசிகலா குடும்பத்தில் இருந்து தனக்கு எதிராக, அதுவும் சொந்த தம்பியே அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருப்பது தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments