Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பணியில் போக்குவரத்து ஊழியர்கள் – இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்புகள் !

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (12:48 IST)
முதல்முறையாக தேர்தல் பணியில் அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

வழக்கமாக தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே கலந்துகொள்வர். ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்துத்துறை ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்கள் முதல் கண்காணிப்பாளர் வரை பணியில் இருப்பவர்களை வாக்குப்பதிவு அலுவலர் 1,2 மற்றும் 3 ஆகியப்பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதற்காக அவர்களுக்குப் பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. ஏப். 7, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் பயிற்சிகள் நடைபெற இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments