அமித்ஷா இன்று சென்னை வருகை: கூட்டணி பேச்சுவார்த்தை நடக்குமா?

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (07:52 IST)
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில் இந்தியாவின் இரண்டு பெரிய தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் தேர்தலை சந்திக்க வியூகங்களை அமைத்து வருகின்றன. குறிப்பாக கூட்டனி விஷயத்தில் இரு கட்சிகளும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன. 
 
இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலமாக சென்று கள ஆய்வு செய்து பாஜகவின் நிலையை ஆய்வு செய்து வரும் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, இன்று சென்னை வருகை தருகிறார். தமிழகத்தில் பாஜக பலவீனமாக இருப்பதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது, மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி அதனை எப்படி ஓட்டாக மாற்றுவது என்பது குறித்து இன்று பாஜக தமிழக நிர்வாகிகளிடம் அமித்ஷா ஆலோசனை செய்யவுள்ளார்
 
சென்னை வரும் அமித்ஷாவை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் ஆகியோர் வரவேற்கின்றனர். அமித் ஷாவின் வருகை காரணமாக தமிழகத்தின் பாஜக தொண்டர்கள் மிகவும் உற்சாகம் அடைந்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரிய போர்க்கப்பல் ஆன் தி வே!.. சரண்டர் ஆகுங்க!. ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!...

நானும் விஜயும் ஒன்னா?!.. நான் யார் தெரியுமா?!.. சரத்குமார் ஆவேசம்!...

அதிமுக - பாஜக ஆட்சி அமைந்தால் தமிழ்நாடு நாசமாகி போகும்!.. மு.க.ஸ்டாலின் ஆவேசம்!..

ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்று உடலை வீசிய கும்பல்!.. சென்னையில் அதிர்ச்சி...

உக்ரைனில் பயணிகள் ரயில் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா!. 4 பேர் பலி!...

அடுத்த கட்டுரையில்