Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷா இன்று சென்னை வருகை: கூட்டணி பேச்சுவார்த்தை நடக்குமா?

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (07:52 IST)
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில் இந்தியாவின் இரண்டு பெரிய தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் தேர்தலை சந்திக்க வியூகங்களை அமைத்து வருகின்றன. குறிப்பாக கூட்டனி விஷயத்தில் இரு கட்சிகளும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன. 
 
இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலமாக சென்று கள ஆய்வு செய்து பாஜகவின் நிலையை ஆய்வு செய்து வரும் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, இன்று சென்னை வருகை தருகிறார். தமிழகத்தில் பாஜக பலவீனமாக இருப்பதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது, மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி அதனை எப்படி ஓட்டாக மாற்றுவது என்பது குறித்து இன்று பாஜக தமிழக நிர்வாகிகளிடம் அமித்ஷா ஆலோசனை செய்யவுள்ளார்
 
சென்னை வரும் அமித்ஷாவை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் ஆகியோர் வரவேற்கின்றனர். அமித் ஷாவின் வருகை காரணமாக தமிழகத்தின் பாஜக தொண்டர்கள் மிகவும் உற்சாகம் அடைந்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்