உஷா மரணம் எதிரொலி - வாகன சோதனைகளுக்கு தடை

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (14:12 IST)
திருச்சியில் போக்குவரத்து காவல் அதிகாரி எட்டி உடைத்ததில் உஷா என்கிற பெண் மரணமடைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் தற்காலிகமாக வாகன சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 
திருச்சியில் நேற்று முன் தினம், தனது கர்ப்பிணி மனைவியுடன் இருசக்கர வானகத்தில் சென்ற ராஜா என்பவரை, போக்குவரத்து  காவல் ஆய்வாளர் காமராஜ் விரட்டி சென்று எட்டி உதைத்ததில் ராஜாவின் மனைவி உஷா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். 
 
இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது தமிழக காவல் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை சாலையில் பொதுமக்கள் வாகன பரி சோதனை செய்யயோ, அவர்களிடம் ஸ்பாட் பைன் வசூலிக்க வேண்டாம் என வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
 
ஆனால், அதே நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடாததால், நேற்று கடத்தல் சம்பவங்களும், குற்றங்களும், செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களும் அதிகமாக நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments