Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேவையற்றது - தம்பிதுரை

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (14:00 IST)
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நீர்வளத்துறை சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டம் தேவையற்றது என்று துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

 
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளி ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மத்திய அரசு ஆலோசணை கூட்டம் நடத்த ஒப்புக்கொண்டது. நீர்வளத்துறை சார்ப்பில் தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
 
அதன்படி 4 மாநிலங்களின் அரசுப் பிரநிதிகள் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டம் தேவையற்றது என்று அதிமுக எம்.பி மற்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்திள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை அதிமுக எம்.பி.க்கள் முடக்குவோம். நீர்வளத்துறை சாப்பில் நடத்தப்படும் ஆலோசனை கூட்டம் தேவையற்றது என்று கூறியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments