Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனாவின் தெற்கு கடலோரம் நோக்கிச் செல்லும் ஆக்ரோசமான ‘மாங்குட்’ புயல்

Advertiesment
China
, ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (19:35 IST)
கடந்த சனிக்கிழமை அன்று பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட மாங்குட் புயலால் ஏற்பட்ட உயிர் பலிகள் மற்றும் பொருளாதார சேதங்களை அந்நாடு கணக்கிட்டு வருகிறது.

இதில் மொத்தம் 25 பேர் பலியாகியுள்ளதாக தெரிகிறது.மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.இந்த வருடத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது மாங்குட் புயல் தான். 900 கி.மீ.வேகத்தில் வீசிய இந்த புயல் அடுத்து ஹாங்காங்கை தாக்கும் என்றும் குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸின் முக்கிய தீவான லூசனின் வட கிழக்கு பகுதியில் பாக்கோ என்ற இடத்தில் சனிக்கிழமையன்று இந்த புயல் கரையை கடந்தது.

மாங்குட் புயல் தற்போது சீனாவின் தெற்கு பகுதி நோக்கி செல்ல உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவின் தெற்கு கடலோரம் நோக்கிச் செல்லும் ஆக்ரோசமான ‘மாங்குட்’ புயல்