Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - அரையிறுதியில் பி.வி.சிந்து

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2018 (15:44 IST)
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து காலிறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
 
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. 

நேற்றைய காலிறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நோசொமி ஒக்குஹாராவும் இந்திய வீராங்கனை சிந்துவும் மோதினர். முதல் ஆட்டத்தில் சற்று பின்னே இருந்த சிந்து அதிரடியாக விளையாடி 21-17 என்ற கணக்கில் முதல் கேமை கைப்பற்றினார்.
 
பின் இரண்டாவது கேமில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தார் நோசொமி. சுதாரித்துக் கொண்ட சிந்து தனது அதிரடி ஆட்டத்தை துவங்கினார். அதிரடியாக விளையாடி 21-19 என்ற கணக்கில் இரண்டாவது கேமையும் தன் வசமாக்கிக் கொண்டார் சிந்து.
சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்ட அனைத்து இந்திய வீரர் வீராங்கனைகளும் தோல்வியுற்று வெளியேறிய நிலையில் இந்திய வீராங்கனை சிந்து  அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சிந்து அரையிறுதியிலும், பைனல்சிலும் வென்று கோப்பையை கைப்பற்றுவார் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments