Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி ரஜினி மாதிரி கருணாநிதி பேசுவார் - பார்த்திபன் பேட்டி

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2018 (15:43 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 
இதனையடுத்து, தமிழக மற்றும் தேசிய அரசியல்வாதிகள், திரைத்துறை பிரபலங்கள் என தினமும் பலரும் மருத்துவமனை சென்று அவரின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று காலை நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் காவேரி மருத்துவமனை வந்து கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்தார்.
 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தளபதி படத்தில் மம்முட்டி மருத்துவமனையில் இருக்கும் போது, தேவாவுக்கு ஒன்று ஆகாது என ரஜினி கூறுவார். யார் சொன்னது மருத்துவரா என கீதா கேட்பார். அதற்கு ரஜினி ‘தேவாவே சொன்னான்’ எனக் கூறுவார். அதுபோல நான் நன்றாக இருக்கிறேன் என கலைஞரே விரைவில் கூறுவார். கலைஞருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், அவர் குணம் பெற வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்கின்றனர். தமிழை நம்பியவர்களை தமிழ் என்று கை விடாது” என அவரது ஸ்டையில் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments