Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி, ஆயுஷ்மானுக்கு 40 ரூபாயா? ராகுல்காந்தி விளாசல்

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (23:07 IST)
இந்திய மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்து ஒரு லட்சத்து முப்பாதாயிரம் கோடி அம்பானிக்கு அள்ளி கொடுத்த பிரதமர் மோடி, மக்களின் திட்டமான ஆயுஷ்மான் திட்டத்திற்கு வெறும் ரூ.40 மட்டும் கிள்ளி கொடுத்துள்ளது ஏன்? என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு  1 லட்சத்து 30 ஆயிரம் கோடி லாபம் கிடைக்க பிரதமர் மோடி வழிவகை செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் அதே நேரத்தில் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஒரு வருடத்திற்கு வெறும் 40 ரூபாய் மட்டும் ஒதுக்கியது ஏன்? என தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.    

ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் இந்தியாவில் மொத்தம் 50 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்றால் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2 லட்சம் கோடியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.40 மட்டுமே கிடைக்கும் என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments