Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவை போல் சிறப்பு அந்தஸ்து கேட்டு ஒடிசா போர்கொடி!

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (17:45 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி பாஜகவுடனான கூட்டணியை ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் முறித்துக்கொண்டது. 
 
தெலங்கானா தனி மாநிலமாக பிறிக்கப்பட்ட போது ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், இதனை மத்தொய அரசு கண்டுக்கொள்ளவில்லை. இந்த காரணத்தால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மோடி ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். 
 
ஆந்திராவின் நிலைக்கே இன்னும் முடிவு வராத நிலையில், தற்போது அடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
 
இந்த கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, இந்தியாவில் மிகவும் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று. இங்குள்ள மக்கள்தொகையில், எஸ்சி, எஸ்டி சமூகத்தினரே பெரும்பான்மையாக உள்ளனர். 
 
மேலும், இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் மாநிலமாகவும் ஒடிசா உள்ளது. மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட ஒடிசாவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments