நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க தனித்து போட்டி: தினகரன் அறிவிப்பு

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (22:24 IST)
வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒருபக்கம் அதிமுக-பாஜக கூட்டணியும் இன்னொரு பக்கம் திமுக-காங்கிரஸ் கூட்டணியும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

மற்ற கட்சிகள் மூன்றாவது அணியோ அல்லது இரு அணிகளில் ஏதாவது ஒரு அணியில் இணைந்தோ போட்டியிட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.

மேலும் பிரதமரை தேர்வு செய்யும் சக்தியாக அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழக நலனுக்காக எப்படி தனித்து போட்டியிட்டார்களோ அதே வழியில் அமமுக போட்டியிடும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..

திருப்பரங்குன்ற விவகாரம்!.. அமைதியாக இருக்கும் விஜய்!.. காரணம் என்ன?..

அமித்ஷாவுன் சந்திப்பு ஏன்?.. ஓப்பனாக சொல்லிட்டாரே ஓபிஎஸ்!...

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments