Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக்கை அறுத்துவிடுவேன் என்று கூறிய அமைச்சரின் அந்தர் பல்டி

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (22:19 IST)
அதிமுக ஆட்சி குறித்து தவறாக விமர்சனம் செய்பவர்களின் நாக்கை அறுத்துவிடுவேன் என்று பேசிய அமைச்சர் துரைக்கண்ணு இன்று அந்தர்பல்டியாக நாக்கு அழுகிவிடும் என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக அறுத்துவிடுவேன் என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

நேற்று தஞ்சையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, ‘‘தமிழகத்தில் ஊழலைக் கண்டுபிடித்ததே திமுக தான். உணவு, நிலக்கரி என அனைத்திலும் ஊழல் செய்தது திமுக. அதிமுக அரசை பற்றி யாராவது தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன்' என்று ஆவேசமாக பேசினார்.

ஒரு அமைச்சர் இவ்வாறு வரம்பு மீறி பேசியது குறித்து அனைத்து தரப்பினர்களிடம் இருந்து கண்டனக்குரல் எழுந்தது. அதிமுக அமைச்சர் ஜெயகுமார் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்களும்  அமைச்சர் அப்படிப் பேசியிருக்கக்கூடாது என்று கூறினர்

இதனையடுத்து தமிழக அரசை பற்றி யாரேனும் குற்றம் சொன்னால், அவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று கூறுவதற்கு பதிலாக நாக்கை வெட்டிவிடுவேன் என தவறுதலாக கூறிவிட்டதாக அமைச்சர் துரைக்கண்ணு அந்தர் பல்டி அடித்திருக்கிறார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments