Publish Date: Fri, 29 Mar 2019 (22:23 IST)
Updated Date: Fri, 29 Mar 2019 (22:24 IST)
மக்களவை தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளின் தலைமையிலான கூட்டணியை எதிர்த்து பெரிய கட்சிகள் துணையின்றி அறிமுகமில்லாத சின்னத்தில் தைரியமாக போட்டியிடும் தினகரனின் அமமுக கட்சி, இந்த தேர்தலில் தனது பலத்தை நிரூபித்து ஒரு மாபெரும் சக்தியாக உருவாகும் என்றே கருதப்படுகிறது
தேர்தல் ஆணையம் இந்த கட்சிக்கு ஒதுக்கிய பரிசுப்பெட்டி சின்னம் அதற்குள் பட்டிதொட்டியெங்கும் பரவிவிட்டதை ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் அதிமுக, திமுகவினர் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை தொகுதி அமமுக வேட்பாளராக திடீரென அறிவிக்கப்பட்ட பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தற்போது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். பிரச்சாரத்தை தொடங்குவற்கு முன்னர் அவர் நான்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் மதுரகவி வானமாமலை ஜீயர் சுவாமிகளிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார். ஜீயரின் ஆசி, மைக்கேல் ராயப்பனை வெற்றியடைய செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்போம்