Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் நிருபரை கன்னத்தில் தட்டிய ஆளுனர்: மீண்டும் சர்ச்சை

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (21:00 IST)
நிர்மலாதேவி விவகாரத்தில் தன்னுடைய பெயர் அடிபடுவது குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தார் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித். இந்த சந்திப்பின்போது நிருபர்கள் கேள்விக்கணைகளை தொடுத்தனர். அதற்கு கவர்னரும் விளக்கம் அளித்தார்.
 
இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பு முடிந்து கவர்னர் எழுந்து சென்ற போது பெண் நிருபர் ஒருவர் கவர்னரிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு பதில் கூறாமல் கேள்வி கேட்ட பெண் நிருபரின் கன்னத்தில் லேசாக தட்டிய கவர்னர், நீங்கள் என் பேத்தி மாதிரி என்று கூறி சென்றார்.
 
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் நிருபர் தனது டுவிட்டரில் காட்டமாக கவர்னரை விமர்சனம் செய்துள்ளார். என் தாத்தா வயதில் இருந்தாலும் என்னுடைய அனுமதியின்றி அவர் என்னை தொட்டது தவறு. அவருக்கு வேண்டுமானால் இது சாதாரணமாக இருக்கலாம், ஆனால் என்னை பொருத்தவரையில் இது ஒரு தவறான செயல் என்று கூறியுள்ளார். இதனால் இந்த சம்பவம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments