Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் நடத்த கூடாது: பள்ளிக்கல்வித்துறை ஆணை

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (19:43 IST)
பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் தவிர தனியாக மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து சம்பாதித்து கொண்டிருந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தனியாக டியூசன் நடத்தக்கூடாது என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இன்று பிறப்பித்த உத்தரவு ஒன்றில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக வீட்டிலோ அல்லது பயிற்சி மையம் அமைத்தோ மாணவர்களுக்கு டியூஷன் எடுக்க கூடாது என்றும் அதுமட்டுமின்றி பயிற்சி மையம், சிறப்பு வகுப்புகளும் அவர்கள் நடத்த கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் ஆசிரியர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
 
ஆசிரியர்கள் மத்தியில் இந்த உத்தரவு அதிருப்தியை பெற்றிருந்தாலும் பொதுமக்களும் மாணவர்களும் இந்த உத்தரவை வரவேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இதேபோன்ற உத்தரவு தமிழகத்திலும் பிறப்பிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லை: உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு? தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்: அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி சர்ச்சை பேச்சு

டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி தடுத்து நிறுத்தம்: ராகுல், பிரியங்கா உள்பட 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கைது..!

10 மணிக்கு முதல் சம்பளம்.. 10.05க்கு ராஜினாமா.. HR ஒருவரின் வேதனை பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments