Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் நடத்த கூடாது: பள்ளிக்கல்வித்துறை ஆணை

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (19:43 IST)
பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் தவிர தனியாக மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து சம்பாதித்து கொண்டிருந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தனியாக டியூசன் நடத்தக்கூடாது என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இன்று பிறப்பித்த உத்தரவு ஒன்றில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக வீட்டிலோ அல்லது பயிற்சி மையம் அமைத்தோ மாணவர்களுக்கு டியூஷன் எடுக்க கூடாது என்றும் அதுமட்டுமின்றி பயிற்சி மையம், சிறப்பு வகுப்புகளும் அவர்கள் நடத்த கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் ஆசிரியர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
 
ஆசிரியர்கள் மத்தியில் இந்த உத்தரவு அதிருப்தியை பெற்றிருந்தாலும் பொதுமக்களும் மாணவர்களும் இந்த உத்தரவை வரவேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இதேபோன்ற உத்தரவு தமிழகத்திலும் பிறப்பிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments