Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடம்பூர் ராஜூவின் மெரீனா பிச்சை குறித்த கருத்துக்கு துரைமுருகன் பதிலடி

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (20:16 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்கியது அதிமுக அரசு போட்ட பிச்சை என்று இன்று காலை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தார். அமைச்சரின் இந்த கருத்துக்கு திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். மெரினாவில் இடத்தை அரசு ஒதுக்கி இருந்தால் அது பிச்சை என்று கூறலாம். ஆனால் நீங்கள்தான் இடத்தை ஒதுக்கவே இல்லையே. நீதிமன்றத்தின் ஆணையினால் தானே கலைஞருக்கு மெரீனாவில் இடம் கிடைத்தது.

மேலும் ஒரு அமைச்சருக்கான தகுதி, கண்ணியத்தை மறந்து கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் பற்றி தெரியாத ஒரு அமைச்சர் இப்படி கண்ணியம் இழந்து கீழ்த்தரமாக பேசுவது சரியல்ல என்று துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments