Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப.சிதம்பரம் வீட்டில் திருடிய இரண்டு பெண்கள் கைது

Webdunia
புதன், 11 ஜூலை 2018 (07:46 IST)
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் நுங்கம்பாக்கம் வீட்டில் நகை, பணம் மற்றும் பட்டுப்புடவைகள் திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக ப.சிதம்பரம் வீட்டில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் பின்னர் வீட்டில் வேலை செய்த பணியாளர்களை விசாரணை செய்தனர். அப்போது வீட்டில் பணிபுரிந்த வெண்ணிலா, விஜி ஆகிய இருவரின் மீது போலீசார்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
 
இதனையடுத்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் பொருட்களை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, வெண்ணிலா, விஜி இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 6 பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்தனர். இருவரிடம் மீண்டும் விசாரணை செய்த போலீசார் அதன் பின்னர் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments