Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப.சிதம்பரம் வீட்டில் திருடிய இரண்டு பெண்கள் கைது

Webdunia
புதன், 11 ஜூலை 2018 (07:46 IST)
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் நுங்கம்பாக்கம் வீட்டில் நகை, பணம் மற்றும் பட்டுப்புடவைகள் திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக ப.சிதம்பரம் வீட்டில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் பின்னர் வீட்டில் வேலை செய்த பணியாளர்களை விசாரணை செய்தனர். அப்போது வீட்டில் பணிபுரிந்த வெண்ணிலா, விஜி ஆகிய இருவரின் மீது போலீசார்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
 
இதனையடுத்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் பொருட்களை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, வெண்ணிலா, விஜி இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 6 பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்தனர். இருவரிடம் மீண்டும் விசாரணை செய்த போலீசார் அதன் பின்னர் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments