Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வரை தான் கெடு: கர்நாடக அரசுக்கு கிடுக்கிப்பிடி போட்ட மத்திய அரசு

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (20:05 IST)
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 104 இடங்களில் வெற்றி பெற்றும் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனால் வெறும் 38 இடங்களில் வெற்றி பெற்ற ம்தச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைத்துள்ளது. 
 
இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தேர்தல் வரை தயங்கி கொண்டிருந்த மத்திய அரசு, பின்னர் கர்நாடக தேர்தலுக்கு பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்திற்கு தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்கள் உறுப்பினர்களை பரிந்துரை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
 
இந்த நிலையில் கர்நாடகாவை தவிர மற்ற 3 மாநிலங்களும் உறுப்பினர்கள் பட்டியலை வழங்கி உள்ளன. ஆனால் கர்நாடகா மட்டும் உறுப்பினர்கள் பட்டியலை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது. இந்த நிலையில்  காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர்களை உடனடியாக பரிந்துரைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் 12ம் தேதிக்குள் அதாவது நாளைக்குள் உறுப்பினர்களை அறிவிக்குமாறு மத்திய அரசு கர்நாடகாவிற்கு அந்த கடிதத்தில் கெடு விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments