Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேராசிரியரின் முகத்தில் கருப்பு மை பூசி பாஜக மாணவ அமைப்பினர் அட்டூழியம்!

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (18:27 IST)
குஜராத் கல்லூரி மாணவர் தேர்தலின் போது தங்களுக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி பேராசியர் ஒருவரின் முகத்தில் கருப்பு மை பூசி பாஜக மாணவ அமைப்பினர் அட்டூழியம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
குஜராத்தில் கட்ச் பூஜ் மாவட்டத்தில் உள்ள கே.எஸ்.கே.வி.கே. பல்கலைக் கழகத்தில் மாணவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக போட்டியிடும் மாணவர்கலின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. 
 
அந்த பெயர் பட்டியலில் தங்களது ஆதரவு மாணவர்கலீன் பெயர் இல்லை என்பதால், இதற்கெல்லாம் குறிப்பிட்ட பேராசியர்தான் காரணம் என கூறி, பேராசிரியர் ஒருவர் முகத்தில் கறுப்பு மை பூசி அவரை ஊர்வலமாக அழைத்து வந்து அட்டூழியம் செய்துள்ளனர் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி நிர்வாகிகள். 
 
இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள பல்கலைக் கழக துணைவேந்தர் சிபி ஜடேஜா, போலீசில் புகார் கொடுத்தடஹி அடுத்து ஏபிவிபி அமைப்பை சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments