Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிஃபா கொலை வழக்கில் திடீர் திருப்பம் - ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (15:23 IST)
கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில்,  குற்றவாளிகள் நார்கோ சோதனைக்கு தயார் என்று கூறியதால், விசாரணையை ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா, கடந்த ஜனவரி மாதம் கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பல நாட்கள் பட்டினி போட்டு, மயக்க மருந்து கொடுத்து, தொடர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
 
ஒரு சிறுவன் உட்பட 8 பேர் இந்த கொடூர செயலை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் போலீஸாரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பலாத்கார சம்பவத்திற்கு எதிராக நாடே கொந்தளித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 8 பேரும் கத்துவா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது குற்றவாளிகள் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனவும் வேண்டுமென்றால் (நார்கோ சோதனை)உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துங்கள் எனவும் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்