Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெனின், பெரியாரை தொடர்ந்து அம்பேத்கர் சிலை உடைப்பு!

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (19:25 IST)
திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை, தமிழகத்தில் பெரியார் சிலை ஆகியவை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து உத்தரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.


திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து அங்கு லெனின் சிலை அகற்றப்பட்டது. இதனால் அங்கு பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஹெச்.ராஜா நேற்று தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
 
இதற்கு தமிழக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று இரவு திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்த முயன்ற பாஜக பிரமுகரை அப்பகுதி மக்கள் கட்டிவைத்து அடித்தனர். இந்நிலையில் தற்போது அம்பேதகர் சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் இன்று அதிகாலை அடையாள தெரியாத நபர்களால் அம்பேதகர் சிலை உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தலித் சமூக மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். சிலையை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய சிலை அமைக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments