நண்பர்கள் வேறு பள்ளியில் சேர்ந்ததால் பிளஸ்-1 மாணவன் தற்கொலை

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (15:48 IST)
நண்பர்கள் வேறு பள்ளியில் சேர்ந்ததால் பிளஸ்-1 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர்.
 
இந்நிலையில் சென்னை கோயம்பேடு சீமாத்தம்மன் நகர் 8-வது தெருவைச் சேர்ந்த அப்பள வியாபாரியான ஆரோக்கியசாமியின் மகன் ஸ்டீபன்ராஜ் 11-ம் வகுப்பு புதிய பள்ளியில் சேர்ந்தார்.

அவருடன் 10 ஆம் வகுப்பு வரை படித்த அவரது நண்பர்கள் பிரிந்து வெவ்வேறு பள்ளியில் சேர்ந்னர். நண்பர்களை பிரிந்த ஸ்டீபன்ராஜ் சில நாட்களாக மனவேதனையில் இருந்தார்.
 
இந்நிலையில் ஸ்டீபன்ராஜ், வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஸ்டீபன்ராஜின் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை.. இறப்பதற்கு முன் செய்த அதிர்ச்சி செயல்..!

பள்ளி மாணவர்களை தொழுகை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை

ராகுல் காந்தி ராணுவத்தை அவமதித்தாரா? பிரியங்கா காந்தி விளக்கம்

திருச்சியில் திகில்: கல்லறையில் இருந்து வந்த பிரியாணி ஆர்டர் - அலறியடித்து ஓடிய டெலிவரி பாய்!

தம்பி விஜய்க்கு ஒன்னும் தெரியல!.. நயினார் நாகேந்திரன் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments