Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒட்டு கேட்க வந்த வேட்பாளரை ஓட வைத்த பொதுமக்கள்

ஒட்டு கேட்க வந்த வேட்பாளரை ஓட வைத்த பொதுமக்கள்
, வெள்ளி, 6 மே 2016 (12:36 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் ஓட்டு சேகரிக்க வந்த திமுக வேட்பாளரை, பொதுமக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


 

 
திருநெல்வேலி மாவட்டம் இளங்கோவன் நகர் பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டிபிஎம் மைதீன்கான், வாக்கு சேகரிப்பதற்காக அந்த பகுதிக்கு வந்தார். 
 
அப்போது அங்கு வந்த பொதுமக்கள், ஐந்து வருடங்களாக இந்த பகுதிக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராமல், ஓட்டு கேட்க ஏன் வந்தீர்கள்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரை ஊருக்குள் விடாமல் திருப்பி அனுப்பினர்.
 
கடந்த இரண்டு முறையும் அந்த தொகுதியில் வெற்றி பெற்று, பத்து வருடங்களில் இரண்டு முறை மட்டுமே அவர் தொகுதி பக்கம் வந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
 
ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பும் செயல் அதிகரித்து வருவது அரசியல் தலைவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து