நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தற்போது முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அதில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி வெற்றிப் பெற்றார்.
அவர் தொடர்ந்து 5வது முறை வெற்றிப் பெறுவது குறிப்பிடத்தக்கது