திமுகவிற்கு ஆறுதல் தந்த சென்னை வாசிகள்

Webdunia
வியாழன், 19 மே 2016 (12:23 IST)
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு முடிவுகள், சென்னை மாநகரம் திமுகவின் கைவசத்தில் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது.


 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
இன்று காலை 8 மணியளவில் தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. அதில் துவக்கும் முதல் திமுக முன்னனியில் இருந்தது. ஆனால் போகப் போக அதிமுக ஏறு முகம் காட்டியது. 
 
அதன்பின் எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவிலும் அதிமுகவே முன்னனியில் இருந்து வருகிறது. அதிமுக 130 தொகுதியிலும், திமுக 95 தொகுதியிலும் முன்னனியில் இருக்கிறது. எனவே ஏறக்குறைய அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.
 
இருந்தாலும், 16 தொகுதிகள் கொண்ட சென்னையில் 11 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. அண்ணாநகர், விருகம்பாக்கம், வேளச்சேரி, கொளத்தூர், சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், ராயபுரம், ஆயிரம் விளக்கு தொகுதிளில் திமுக முன்னனியில் இருக்கிறது.
 
இதனால், சென்னை  திமுகவின் கோட்டை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சிலிண்டருக்கு ரூ.968 உயர்வு.. வணிக சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.3237..! வீட்டு சிலிண்டர் விலை என்ன?

ஸ்டாண்டர்ட் சார்ட்டர் வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்..!

பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. பக்தர்கள் பரவசம்..!

பழைய கட்டிடங்களில் பேய் நடமாட்டம் இருப்பது உண்மையா?!.. ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments