Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் முடிவு : வெறிச்சோடிப்போன தேமுதிக அலுவலகம்

Advertiesment
DMDK
, வியாழன், 19 மே 2016 (15:01 IST)
வெளியாகியுள்ள சட்டமன்ற தேர்தல் முடிவில் தேமுதிக மிகவும் சொற்பமான ஒட்டுகளையே வாங்கியுள்ளதால், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் தொண்டர்கள் இல்லாமல் வெறுச்சோடி போயுள்ளது.


 

 
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. அரவங்குறிச்சி, தஞ்சாவுர் தவிர்த்து மொத்தம் 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 
 
தேமுதிக தலைவர் இந்த முறை மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அதிமுக, திமுகவிற்கு மாற்று வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று மநகூ தலைவர்கள் கூறி வந்தனர்.
 
ஆனால், உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் பின்னடைவை சந்தித்து மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டார். அதேபோல், காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டிட்ட திருமாவளவன் 83 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
 
மேலும், மநகூ வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும், மிக சொற்பமான ஒட்டுகளையே பெற்றுள்ளனர்.
 
இதனால், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் தொண்டர்கள் யாரு இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓ.எஸ்.மணியன் வெற்றி