Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முடிந்தது சூப்பர் சிங்கர் சீசன் 7 – டைட்டில் வின்னர் யார் தெரியுமா ?

முடிந்தது சூப்பர் சிங்கர் சீசன் 7 – டைட்டில் வின்னர் யார் தெரியுமா ?
, திங்கள், 11 நவம்பர் 2019 (10:38 IST)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று கோயம்புத்தூரில் நேற்று நடந்து முடிந்து வின்னர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதன் அனைத்து சுற்றுகளும் முடிந்துள்ள நிலையில் நேற்று இறுதி சுற்று கோயம்புத்தூரில் கொடிசியா மைதானத்தில் நடந்தது.

இந்த இறுதி சுற்றுக்கு பங்கேற்பாளர்களில் இருந்து சாம் விஷால், புண்யா, மூக்குத்தி முருகன், கௌதம் மற்றும் விக்ரம் ஆகியோர் தேர்வு பெற்றனர். இந்நிலையில் இறுதி சுற்று முடிந்து டைட்டில் வின்னர் அறிவிக்கப்பட்டுள்ளார். போட்டிகள் நடந்து முடிந்த பின் மூன்றாவது இடத்தை சாம் விஷால் மற்றும் புண்யா ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.. 2-வது இடத்தை விக்ரம் பிடித்தார். இந்த சீசனின் டைட்டில் வின்னராக மூக்குத்தி முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இசையமைப்பாளர் அனிருத் சீசன் டைட்டில் வின்னர் விருதை வழங்கினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகையையும் அவர் தாயையும் படுக்கைக்கு அழைத்ததை ஒத்துக் கொண்ட நடிகர் - இவரா இப்படி ?