Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் பைனலுக்கு செல்லப் போவது யார்?

பிக்பாஸ் பைனலுக்கு செல்லப் போவது யார்?
, வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (15:57 IST)
விநாயகர் சதுர்த்தி என்பதால் கோலாகலமான பாட்டுன் தொடங்கியது நேற்றையை நாள்.



வீட்டின் புது இணைப்பாக மருத்துவ முத்த நாயகன் ஆரவ் வந்துள்ளார்.

'சுத்தி சுத்தி வந்தீங்க' என்ற பெயரில் ஒரு டாஸ்க் நேற்று வழங்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் வென்றால், நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்லலாம்.  இதன் படி, போட்டியாளர்கள் அனைவரும் ஒரு கோப்பையில் தண்ணீர் வைத்துக்கொண்டு வட்டமாக சுற்றிவர வேண்டும். யாருடைய நீர் இதில் குறைகிறதோ அவர்கள் போட்டியை விட்டு வெளியேற்றப்படுவர்.

இந்நிலையில் இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது. இதில் விஜி வெளியேற்றப்படுகிறார். யாஷிகா, ஜனனி இரண்டு பேரும் கோப்பையை பிடிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். ஜனனியின் கோப்பையிலிருந்து அதிக அளவு நீர் வெளியேறுகிறது. அப்புறம் என்ன நடந்தது என்பதை காட்டவில்லை. இருவரும் கட்டிஅணைத்துக் கொள்கின்றனர். ஜனனியை தட்டிக்கொடுக்கிறார் ஆர்த்தி.

டாஸ்கில் வெற்றிப்பெற்று நேரடியாக பைனல் வாரத்திற்கு தேர்வாகும் போட்டியாளர் யார் என்பதை இன்று இரவு எபிசோட்டில் தான் காண வேண்டும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலை கண்ட்ரோல் பண்ண முடியாது, பலபேருடன் வரும்: யாஷிகா