Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணத்தையும் இலவசத்தையும் மட்டுமே எதிர்பார்த்தால் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது! பிரச்சாரத்தில் விஜயபிரபாகரன்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (18:26 IST)
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக இப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தோடு கூட்டணி வைத்துள்ளது. இதையடுத்து விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தீவிரமாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

புதுக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் ‘பணத்தைக் கொடுத்து வாக்காளர்களை வாங்கிவிடலாம் என சிலர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஆனால் அவர்களை மக்கள் முழு லாக்டவுனில் தள்ளி விடுவார்கள். பணத்தையும், இலவசப் பொருட்களையும் மட்டுமே எதிர்பார்த்தால், கடவுளே வந்தாலும் மக்களைக் காப்பாற்ற முடியாது. எனவே மாற்றுக்கட்சியான எங்களுக்கு வாக்களியுங்கள். தலைவர் விஜயகாந்த் 40 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து வருகிறார்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments