டாக்ஸி ஒட்டுனர் ஒரு முட்டாளைப் பார்த்து நான் ஒரு கேள்வி கேக்கிறேன். அதுக்குப் பதில் சொன்னால் நீங்கள் தான் அதி புத்திசாலி என்றார்.
சரி என ஒப்புக் கொண்டான் முட்டாளும்.
கேள்வி - எனது அம்மாவுக்கு 2 பிள்ளைகள். ஒருவர் எனது தம்பி மற்றவர் யார்? என்றார்.
அந்த முட்டாள் பதில் தெரியாமல் முழிக்க, டாக்சி ஒட்டுனர் சொன்னார். 'அடமுட்டாளே அது நான் தான்' என்றார்.
சில நாட்களுக்குப்பின்பு அந்த முட்டாள் தனது ஊருக்குப் போனார். அங்கிருந்த தனது நண்பர்களிடம், ' நான் ஒரு கேள்வி கேக்கிறேன். யார் சரியான பதில் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று கேள்வியைக் கேட்டார். எனது அம்மாவுக்கு 2 பிள்ளைகள். ஒருவர் எனது தம்பி மற்றவர் யார்? என்றார்.
பதில் தெரியாமல் எல்லா நண்பர்களும் முழிக்க அந்த முட்டாள் மற்றவர்களிடம் அட முட்டாள்களே அது லண்டனில் இருக்கும் டாக்ஸி ஓட்டுநர் என்றார்.