காங்கிரஸ் கட்சி மீதும் பாஜக மீதும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக ஊழல் புகார்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் ஊழல் எதிர்ப்பாளர்களும், அறிவிப்பாளர்களும் காங்கிரஸ் கட்சியினரும் நேரில் சந்தித்துப் பேசினால் எப்படி இருக்கும்- இதோ ஒரு கற்பனை!
அர்விந்த் கெஜ்ரிவால்: வத்ரா விவகாரத்துக்கு பதில் இல்ல, சல்மான் குர்ஷித் ஊழல் என்ன ஆச்சு? 2ஜி என்ன ஆச்சு? நிலக்கரி சுரங்க விவகாரம் என்ன ஆச்சு?
மன்மோகன் சிங்: உம்...என்ன ஆச்சு குழந்தை அழுதுச்சு! பொருளாதார வளர்ச்சி இன்னும் பாக்கி இருக்கும்போது பொறுப்போட பேசுங்க!
கெஜ்ரிவால்: நிதின் கட்காரி நில ஊழல் பல விவசாயிகளோட வயித்துல அடிச்சுருக்கு இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?
அத்வானி: அவர் சரியா வந்துருவார், கிளீனா வந்துருவார்... அப்படியெல்லாம் செஞ்சிருக்க மாட்டார். இது காங்கிரஸ் கட்சியோட சதி. விவசாயிகள் நல்லா இருக்காங்க, நான் நேத்திக்குக் கூட இமாச்சலப்பிரதேசம் போனப்ப எனக்கு விருந்து சோறு போட்டாங்க.
சல்மான் குர்ஷித்: 71 லட்சம், 69 லட்சம் இதெல்லாம் ஒரு கணக்கா, சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். யாரா இருந்தா என்ன? என் கிட்டயேவா, டேய் யார்றா அங்க? உள்ள விடாதீங்கடா? திரும்பி போயிடுவானா?
ப.சிதம்பரம்: வத்ரா பிசினஸ் செய்யறாரு! அதுக்கு நிலம் தேவைப்படுது, வாங்கினாரு வித்தாரு இதுலெல்லாம் போய் யாரு தலையிட முடியும்! வாங்கறவங்க விக்கத்தான செய்வாங்க! நீங்க கூடத்தான் உங்க பழைய சைக்கிளை வித்தீங்க நாங்க அதில ஊழல் அது இதுன்னு சொன்னோமா?
கெஜ்ரிவால்: பின்ன ஏன் அந்த நிலப்பரிவர்த்தனைக்கு ஐ.ஏ.எஸ். ஆபிசர் தடை போட்டாரு?
ராகுல் காந்தி: உத்திரப்பிரதேசத்துல இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகிட்டு இருக்காங்க அத பத்தி கவலைப்பட இந்த நாட்டுல ஆளே இல்லையா?
ப.சிதம்பரம்: ஐ.ஏ.எஸ். ஆபிசர் தடைபோட்டார்னா அது அவரோட தனிப்பட்ட பிரச்சனை, ஒருத்தரோட குடும்ப பிரச்சனையில அரசாங்கம் எப்படி தலையிட முடியும்?
கெஜ்ரிவால்: ரிலையன்சுக்கு சாதகம் செய்றதுனாலதான் பெட்ரோல், டீசல் விலை கேஸ் விலை ஏறிடுச்சு அப்படீங்கறத ஏன் மறைக்கிறீங்க?
கபில்சிபல்: என்ன உளர்றீங்க? நீங்க பெட்ரோல் பங்க் பக்கமே போகலைன்னு தெரியுது. அங்க போனீங்கன்னா விலை ஏறினது தெரியும். இதுல மறைக்க என்ன இருக்கு?
திக்விஜய் சிங்: இவ்வளவு பேசுறீங்களே மோடி வளர்க்கற நாயோட பேர் என்னன்னு யாருக்காவது தெரியுமா? அடுத்தவங்களோட சொந்த விஷயத்தை பேசி எனக்கு பழக்கமில்லை. மோடி ஏன் தன் நாயோட பேரை மறைக்கிறாரு?
பிரசாந்த் பூஷன்: 2ஜி வழக்கு ரொம்ப மந்தமா நகருது! தப்பு செஞ்ச எல்லாரும் தப்பிச்சுடுவாங்க போலருக்கு!
சல்மான் குர்ஷித்: டேய் தப்பிச்சா உனக்கு என்ன? சட்டத்துல எல்லத்துக்கும் வழி இருக்கு, இப்படியே பேசிட்டிருந்தேனா உன்னை குண்டர் சட்டத்துல தூக்கி உள்ள வச்சுருவேன் ஜாக்கிரதை.
மன்மோகன் சிங்: இன்னும் ரெயில், தண்டவாளம், பஸ், தட்டுமுட்டுச் சாமான்கள், பழைய பேப்பர் வாங்கறது விக்கறது, பழைய இரும்புச் சாமான் ஈயம் பித்தாளைக்கு பேரிச்சம் பழம் கொடுக்கிற துறைகள்ல அன்னிய நேரடி முதலீடு வரப்போகுது எல்லம் மகிழ்ச்சியா இருங்க!
அத்வானி: உம்! அன்னிய நேரடி முதலீடு ரொம்ப மோசம் இப்படியெல்லாமா ஆட்சி செய்வாங்க?
சோனியா: நாட்டில் ஊழல் மூலை முடுக்கெல்லாம் பரவிடுச்சு!!! (காங்கிரஸ் ஊழல்வாதிகள் கைதட்டி ஆரவாரம்...)
அர்விந்த் கெஜ்ரிவால்: அடுத்தவாரம் ஒபாமா பற்றி ஒரு முக்கிய ஊழலை வெளியிடுவேன்...
வீர்பத்ர சிங்: டேய் யார்றா அது? அடிச்சு மூங்சிகீஞ்சியெல்லாம் பேத்துருவேன். போட்டோ எடுக்கறீங்களோ? கேமராவோட ஒரு பய வீட்டுக்கு போக முடியாது!
சுப்ரமணிய சுவாமி: சோனியா, ராகுல் காந்தி ரெண்டு பேரும் நில அபகரிப்பு பண்ணிருக்கா... 1600கோடி சமமான ஊழல் இது அப்பறம் காங்கிரஸ் கட்சியிலிருந்து கம்பெனி ஒண்ணுக்கு அவா பணம் கொடுத்திருக்கா அரசியல் கட்சி கம்பெனிக்கு பணம் கொடுத்து பாத்திருக்கேளா? கேஸ் போடப்போறேன்.
அர்விந்த் கெஜ்ரிவால்: இதுவேறயா? இது என் பார்வைக்கு வராம எப்படி போச்சு? நியாயமா பாத்தா நான் இதை அடுத்தவாரம் சொல்லலாம்னு இருந்தேன் சுவாமி முந்திக்கிட்டாரு.
சிதம்பரம்: கம்பெனி வேற, கட்சி வேற, கட்சி வேற கம்பெனி வேற, உதவி செய்றதப்போய் ஊழல்னு சொன்னா எப்படி? இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுதான் அன்னையோட குணம், அவங்க சத்தியம் காக்கற தருமத்தாய் அவங்களப்போய் அபாண்டமா இப்படி பேசலாமா?
மணீஷ் திவாரி: இந்த மாதிரி எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொருத்தர் இதுமாதிரி கிளம்பிடறாங்க! கட்சின்னு இருந்தா ஊழல் இருக்கத்தான் செய்யும், ஆட்சின்னு இருந்தா இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். பொது இடங்கள்ல இப்போ ஊழல் குற்றச்சாட்டு செய்யறது ஒரு பொழுதுபோக்காப்போச்சு. சுப்ரமணியசாமி சொல்றதே தப்பு இப்ப ராகுல் காந்தி எங்க கட்சிலயே இல்லை!
நிதின் கட்கரி: நில ஊழல் நான் என்ன என் நன்மைக்காகவா செஞ்சுக்கிட்டேன். நிலத்தோட நன்மைக்காக செஞ்சேன், இதுல என்ன ஊழல் இருக்கு? டெய்லி என் வீட்டுல 15,000 விவசாயிகள் சாப்பிடறாங்க! அவங்க வயித்துல அடிக்கற முயற்சிதான் இந்தக் குற்றச்சாட்டு என் கிட்டேயிருந்து விவசாயிகள பிரிக்க சதி நடக்குது. சும்மா விடமாட்டேன். விவசாயிகளை இந்தச் சக்திகளிடமிருந்து காப்பாத்தத்தான் போறேன்.
சல்மான் குர்ஷித்: அட விடுங்க பாஸ்! இவிங்க இப்படித்தான் நம்மள அடிச்சுகிட்டேயிருப்பாங்க! நமக்கு என்ன இதெல்லாம் புதுசா?
ப.சிதம்பரம்: என்னோட கவலையெல்லாம் ரிசர்வ் வங்கி பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையா இருக்கறதுதான். வங்கிகள்ல செய்யற டெபாசிட்டுக்கு இனிமே டெபாசிட் செய்றவங்கதான் வட்டி கொடுக்கணும்னு ஒரு சட்டத்தை கொண்டு வந்தாச்சுன்ன்னா சரியா போயிடும்! மக்கள் அப்பத்தான் இந்த பேங்கையெல்லாம் மறந்துட்டு பங்குச்சந்தையில முதலீடு செய்வாங்க!
அத்வானி: பென்ஷன் ஃபண்ட், பிராவிடண்ட் ஃபண்ட் இப்படி எல்லாத்தையும் சூதாட்டம் நடத்தினா என்ன மிஞ்சும்?
மன்மோகன் சிங்: பொருளாதாரம் வளர்ச்சியடைணும்னா ஆயிரக்கணக்கான நேஷனல் பேங்குகள் திவாலானாத்தான் சரியா வரும்! சீர்திருத்தம் செய்ய விடமாட்டேன்னு சொன்னா எப்படி? மக்கள் வேணும்னா தனியார் வங்கிகள்ல டெபாசிட் செய்யட்டும் வட்டி வேணும்னா பாத்து ஆயிரம் ரூபாய்க்கு 50 பைசா போட்டுத் தரச்சொல்றேன்.
கெஜ்ரிவால்: வர்ற வருஷப்பிறப்பன்னிக்கு இன்னும் 12 பேரோட ஊழல் ஜாதகத்தை வெளியிடப்போறேன்.
திக்விஜய் சிங்: கெஜ்ரிவால் ஒரு கடைல கர்சீப் வாங்கின போது காசு கொடுக்காம ஏமாத்திருக்காரு! உடனடியா இதை சிபிஐ விசாரிக்கணும்.
மணீஷ் திவாரி: அது மட்டுமல்ல ஃபாரின்லேர்ந்து புடவை வாங்கிட்டு வந்துருக்காரு. யாருக்கு அந்த புடவை அதுக்கு காசு ஏது இதையும் சிபிஐ விசாரிக்கும்.
போனி பிரசாத்: ஊழல் நடப்பது நல்லதுக்குத்தான், அப்பத்தான் நாடு செழிப்பா இருக்குன்னு அயல்நாட்டு முதலீடு நம் பக்கம் வரும், வறுமை ஒழிஞ்சுடும்.
திக்விஜய் சிங்: பிரசாந்த் பூஷன் சின்ன வயசுல கல்யாண மண்டபத்துல வேற் ஒருத்தரோட செருப்பப் போட்டுக்கிட்டு வந்துட்டாரு! சிபிஐ விசாரிக்கணும்.
கபில்சிபல்: அண்ணா ஹசாரேயே கெஜ்ரிவால் பத்தி என்கிட்ட சொல்லியிருக்காரு! பதவி ஆசை அவரைப்புடுச்சு ஆட்டுதுன்னு!
ப.சிதம்பரம்: ஊழலுக்கு