Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்: ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் நீதிமன்றத்தில் முறையீடு

Siva
திங்கள், 9 செப்டம்பர் 2024 (15:13 IST)
160 ஏக்கர் நிலத்திற்கு ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை செலுத்தாத விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரேஸ் கோர்ஸ் மைதானத்தை தமிழ்நாடு அரசு, தனது கட்டுப்பாட்டில் எடுத்தது.

இந்த நிலையில் இதனை எதிர்த்து ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் அவசரமாக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதுகுறித்த மனுவில் கால அவகாசம் கொடுக்காமல் சீல் வைக்கப்பட்டுள்ளது என வாதம் செய்யப்பட்டது.

அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்திற்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் கொடுத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில்   தகவல் தெரிவித்தது.

மேலும் குத்தகை ரத்து குறித்து நோட்டீஸ் அளித்து காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, குத்தகை ரத்து குறித்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதம் செய்தார்.  இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்கப் போவது இவரா?... வெளியான தகவல்!

மனைவி ஆர்த்தியை பிரிந்த ஜெயம் ரவி.! மிகவும் கடினமான முடிவு எடுத்துள்ளதாக அறிக்கை.!!

'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸ், செப்டம்பர் 13 முதல் ஸ்ட்ரீமாகிறது!!

விக்யாத் இயக்கத்தில் "யுவர்ஸ் சின்சியர்லி ராம்"படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது!

திரை நட்சத்திரங்களின் பாராட்டு மழையில், குழந்தை நட்சத்திரம்- லக்‌ஷனா ரிஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments