Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா-41 படத்தின் தலைப்பு இதுதான்!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (18:01 IST)
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்  சூர்யா, இவர் பாலா இயக்கத்தில் நடித்து வரும் புதிய படம் குறித்த ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 
 
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்தது.
 
இதையடுத்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஜூன் 7 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மதுரை சம்மந்தமான காட்சிகளை சென்னையிலேயே எடுத்துவிட்டு, அடுத்து கோவாவுக்கு புறப்பட உள்ளார்கள் என தகவல் வெளியானது.
 
பிதாமகன், நந்தா ஆகிய படங்களை அடுத்து, சூர்யா- பால இருவரும் இணைந்துள்ள இப்ப்டம்   பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்படத்திற்கு கடலாடி என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
சூர்யா 41 படத்தில் தலைப்பு குறித்து  விரைவில்  அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியானது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பேன் இந்தியா படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய பா ரஞ்சித்!

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments