Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் பாலா மீது துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக புகார்!

நடிகர் பாலா மீது துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக புகார்!
, ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (13:39 IST)
தமிழில் அன்பு படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் பாலா. இவரின் அண்ணன்தான் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சிறுத்தை சிவா. மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்த பாலா அம்ருதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்றது. அந்த வீடியோவில் மலையாள சினிமா நடிகர்களைப் பற்றி தவறாக பேசும் யுடியூபர் சந்தோஷ் வர்கி என்பவரை அவர் மன்னிப்புக் கேட்க வைத்திருந்தார்.

இதுபோல மற்றொரு யுடியூபரான அஜு அலெக்ஸ் என்பவர் தான் வீட்டில் இல்லாத நேரத்தில் தன் வீட்டுக்கு வந்த நண்பர் அப்துல் காதரிடம் துப்பாக்கியைக் காட்டி நடிகர் பாலா மிரட்டிச் சென்றதாக அவர் புகார் கொடுத்துள்ளார். இது சம்மந்தமாக அஜு அலெக்ஸ் பாலா மீது புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் கட்சியின் உறவை துண்டிக்க திமுக வுக்கு துணிவிருக்கிறதா? பாஜக கேள்வி..!