Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் யாஷிகா! தனித்து விடப்பட்ட ஐஸ்வர்யா

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (18:56 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில் யாஷிகா அந்த இருவரில் ஒருவர் என தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் மட்டும் இரண்டு பேர் வெளியாறினால்தான் இறுதிப்போட்டிக்கு நால்வர் செல்ல முடியும். அந்த வகையில் ஐஸ்வர்யா, ரித்விகா, யாஷிகா, பாலாஜி மற்றும் ஐவரில் இருவர் வெளியேற வேண்டும். ஜனனி கோல்டன் டிக்கெட்டை வைத்துள்ளதால் அவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்று மற்றும் நாளைய நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு சற்றுமுன் முடிந்தது இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் பதிவு செய்த டுவிட்டுகளீல் இருந்து இந்த வாரம் யாஷிகா மற்றும் பாலாஜி வெளியேறிவிட்டதாக தெரிய வந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளில் இருந்து யாஷிகாவை இணைபிரியாமல் ஒரே படுக்கையில் படுத்து கொண்டிருந்த ஐஸ்வர்யா, அடுத்த வாரம் முழுவதும் தனிமையில் விடப்படுகிறார். மூன்று தமிழ்ப்பெண்கள் ஒருபக்கமும், ஐஸ்வர்யா ஒருபக்கமும் இருப்பதால் ஐஸ்வர்யா, முழுசா சந்திரமுகியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கும் பாண்டிராஜுக்கும் முட்டல் மோதல் இருந்தது உண்மைதான்… விஜய் சேதுபதி பகிர்வு!

நான் மேதையோ சிறந்த இயக்குனரோ இல்லை… சஞ்சய் தத்தின் கோபம் குறித்து லோகேஷ் பதில்!

ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யுத் ஜமால்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் ‘மகாராஜா’ புகழ் நித்திலன்?

இராமாயணம் இரண்டு பாகங்களும் சேர்ந்து 4000 கோடி ரூபாய் பட்ஜெட்டா?... தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments