Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த தோழியின் பிறந்தநாள் - நினைவுகளை பகிர்ந்து யாஷிகா உருக்கம்!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (20:01 IST)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை யாஷிகா ஆனந்த் தன் நண்பர்களுடன் இரவு நேரத்தில் பார்ட்டிக்கு சென்ற போது அவரது கார் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த தோழி பவனி சம்பவ இடத்திலேயே பலியானார். 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று தன் தோழியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், எத்தனையோ இரவுகளை நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். 
 
எல்லாவற்றிலிருந்தும் என்னைப் பாதுகாக்க நீங்கள் எப்போதும் இருந்திருக்கிறீர்கள், நீங்கள் என்னைச் சுற்றி இருப்பதற்கான அறிகுறிகளை எனக்குக் கொடுத்தீர்கள்.. தேவதை எண்களும் அவற்றின் அர்த்தங்களும் என்னை வலுவாக வைத்திருக்கின்றன. 
நான் உனது எண்ணங்களை எழுப்பி, எங்கள் நினைவுகளின் வழியாக உறங்குகிறேன்... 30வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீங்கள் எங்களுடன் இங்கே இருந்திருக்க விரும்புகிறேன்... உங்களின் பல கனவுகளை எங்களால் நனவாக்க முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். 
 
என் அன்பான தேவதை பவனி நான் ஒவ்வொரு நொடியும் உன்னை மிஸ் பண்றேன். உனக்காக நான் ஒரு சிறப்பாக மனிதனாக வருவேன் என்று நம்புகிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

’பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகனாக இவர் தான் நடித்திருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்

அஜித் - ஆதிக் இணையும் ‘ஏகே 64’ படத்தின் நாயகி இவர் தான்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments